பச்சப்புள்ள @ ஸ்ரீ மூர்த்தி...

என்னோட அதிகமா நெருங்கி பழகிய நண்பன் பச்சப்புள்ள @ ஸ்ரீ மூர்த்தி...

இவனை எனக்கு பிடிச்சது இவனோட டைமிங் கமெண்ட்டு தான்..பலநாள் இவனோட மடலை படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சி எல்லாரும் என்னை ஒருமாதிரி பாக்குற அளவுக்கு ஆகியிருக்கேன்.]

சாட்ல பேசி சிலநாளில் போன் நம்பர் வாங்கி பேச ஆரம்பிச்சேன்..இவனை பச்சபுள்ளன்னு கூப்பிடாம திருமூர்த்தின்னு தான் கூப்பிடணும்னு முதல் தடவை சொன்னேன்..ஆனா இதுவரைக்கும் பச்ச, மச்சி ரெண்டுதான்..

நானும் இவனும் பலநாள் அனந்தாக்களா தான் பேசிக்குவோம்..ஹி ஹிஹி..இப்பலாம் இல்ல..ஓம்ஸ்ரீ க்கு முன்னாடி மணிக்கணக்கா பேசிட்டிருந்த நண்பன்..என்ன பேசுவோம்னு தெரியாது ஆனா நிறைய பேசுவோம்..
இப்பதான் மச்சி பேங்களூரும் ஹோசூரும் சேலமும்னு மாறி மாறி பிசியாகிட்டான்..இருந்தாலும் வாரத்தில் ரெண்டுமூனு முறையாவது போன்ல பேசிக்கறதுண்டு..

இவனோட மடல்களில் நிறைய கருத்து இருக்கும். எப்பவுமே டேய் மச்சி நீ சொல்றது எல்லாமே ஒருமுகமா தொகுத்து கட்டுரை எழுதினா கண்டிப்பா ரீச் ஆகும்னு சொல்லுவேன்.. சரிமச்சி பண்ணிட்டா போச்சுன்னு சொல்லுவான்..செய்தது மட்டுமில்ல..

இவங்கிட்ட என்னை ஆச்சர்யப்படுத்திய விசயம் இன்னொன்னு என்னா ஒருத்தரோட மடல்களை வச்சு அவங்களை அப்படியே உள்வாங்கி அதை தக்க தருணத்தில் அதே ஸ்டைல்ல திருப்பிக்கொடுக்கறது..

ஞாபகசக்தி அதிகமாவே கொடுத்திருக்கான் ஆண்டவன்..இரண்டுமுறை நேர்ல பாத்திருக்கேன்..என்னோட அழைப்பை ஏற்று என் தங்கை கல்யாணத்துக்கு வந்தவனை சாப்பிடக்கூட வைக்கமுடியா சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது தான் எனக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கும்...

இந்தமடல் மூலமா ஒன்னே ஒன்னு கேட்டுக்கறேன் பச்சக்கிட்ட...எங்கவீட்டுக்கு வந்து ஒருதபா சாப்பிட்டுட்டு போயிடு மச்சி..

0 comments:

Post a Comment