தேனுஷா

என்னுடைய மனசுமுழுக்க நிறைஞ்ச இனிய தோழி தேனுஷா..


இங்கு நம் குழுமத்தில் சிலகாலம் நண்பர்கள் சண்டையிட்டுக்கொண்டு மடலிடாத நேரம் நானும் முத்தமிழில் போய் இங்கு கொட்டிகிட்டிருந்த குப்பையை கொட்ட ஆரம்பித்தேன்..

அப்போதான் அர்ஜீன் வந்து டேய் சாந்தி ,தேனுஷான்னு ரெண்டு பேரு சங்கம் ஆரம்பிச்சு சாவடிக்கிறாய்ங்க..நீயும்வாடா நாம அவங்களுக்கு எதிரா ஒரு சங்கம் ஆரம்பிப்போம்னு ஆரம்பிச்சது தான் புதியமன்னர்கள் சங்கமம்..

யார் ரெண்டுபேரை சண்டை போட்டுதுரத்தணும்னு வந்தேனோ அவங்க ரெண்டுபேரும் தான் அதிகமா மனசுக்குள்ள ஒட்டிக்கிட்டாங்க..என்னை இங்க அழைத்த அர்ஜீனை விட..

உனக்காக என்ற ஒரு இழை ராஜி ஆரம்பிச்சு வச்சது..அதில தேனுஷா கவிதை எழுத அதுக்கு பதில் மொக்கையா அனுப்பிட்டிருந்த நான் சில மணிநேரங்களில் இருவரும் மாறி மாறி காவியமா எழுத ஆரம்பிச்சோம்,..ஒரு ரெண்டுநாள் போனதின் பின்னாடி சாட் பண்ண ஆரம்பிச்சோம்..

அந்த காவியத்தை நாங்க கொண்டுப்போறதுக்குள்ள ரெண்டுபேரும் ரொம்ப நெருங்கிபழக ஆரம்பிச்சோம் கடல் கடந்து...இவளும் ஓம் மாதிரி தான்..எனக்கு அட்வைஸ் பண்றதிலிருந்து எங்க வீட்ல இருக்கறவங்க நலம் விசாரிக்கற வரைக்கும்

எலும்பா ,லூசு ,மண்டு முண்டம், இதெல்லாம் இவ எனக்கு வச்ச பட்டபெயர்கள்.எதாச்சும் ஒருதலைப்புல வெச்ச கை எடுக்காம வேகமா எழுதக்கூடிய திறன் எனக்கு வந்தது தேனுவும் நானும் எழுதின உனக்காக கவிதை இழையிலிருந்து தான்..

காலைல ஆரம்பிச்சா ராத்திரி பன்னிரண்டு மணிவரைக்கும் கூட சாட்பண்ணிட்டிருப்போம் ரெண்டுபேரும்..விடுமுறைநாளில் எங்காவது ஒரு பிரவுசிங் சென்டர் போய் சாட் பண்ணினாதான் பொழுது போனமாதிரி இருக்கும்னா பாருங்களேன்..

பொதுவா தேனுவோட பெண்ணியம் பேசும் முறை எனக்கு ரொம்பவே பிடிக்கும்..என்ன பாரதி கண்டபுதுமைப்பெண்ணோ ஆரம்பத்தில் நினைச்சிருக்கேன்..ஆனா போக போக புதுமைப்பெண்ணிலிருந்து ஒரு அட்வான்ஸ் ஸ்டேஜ்ல தேனு இருக்கறதா மனசுக்குள்ள ஒட்டிக்கிட்ட நினைவை நான் வளர்ந்த சூழலோ என் மனநிலையாலோ தட்டிவிடமுடியலை..

ரொம்ப லேட்டா கோபப்படுறதும் ரொம்பசீக்கிரமே பேசிடறதும் இவக்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட பாடங்கள்னும் சொல்லலாம்..
என்னோட‌ தோழி பேக‌மை என் நினைவில் எப்போதும் டார்ட்டாயிஸாக‌ சுழ‌ல‌வைக்கும் நிக‌ழ்கால‌ம் தேனு....

இந்த‌ இழைமூல‌மா என்னோட‌ பிரிய‌மான‌ தோழிக்கு க‌விதை தொகுப்பு பிடி எப் பைலாக‌வாவ‌து அனுப்பிடுவேன்னு சொல்லிக்க‌றேன்..

0 comments:

Post a Comment